திரு பொன்னுத்துரை அன்பழகன்

                                                        (கிராம அலுவலர்)
                                                           இறப்பு : 8 ஏப்ரல் 2012

நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அன்பழகன் அவா்கள் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை(புகையிரத நிலைய அதிபர்) மற்றும் மங்களேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், அனலைதீவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பராசக்தி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
சித்திராதேவி அவா்களின் அன்புக் கணவரும்,
வராகி, லக்சி, பவிந்தன், ரஜிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலினி, பிரியதர்ஷினி, அன்பரசன், யசோதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அலெக்சாண்டர் பிளமிங், வைகுந்தவாசன், கோபாலசிவம், சசிகுமார், கேதீஸ்வரி, ஜெயந்தி, ரேவதி, பிரேமா, சுகந்தி, நந்தினி ஆகியோரின் மைத்துனரும்,
ரமேஸ், தனபதி, ராஜ்குமார், அலன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.04.2012 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர் - 4ம் வட்டாரம், நயினாதீவு.