| கார்த்திகேசு செல்வேந்திரன் |
| (மாவீரன் கானகவேங்கை தமிழீழம்) |
| வீரப்பிறப்பு : 27 ஏப்ரல் 1980 — வீரச்சாவு : 25 செப்ரெம்பர் 2007 |
சங்கர்தார்வயல் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் ஐந்து ஓடி மறைந்ததுவே ஆரூயிர் செல்வமே எமை விட்டு எங்கு சென்றீர்; அன்பான எம் துணையே அனுதினம் உன் நினைவால் அடி எடுத்து வைக்கின்றோம்.
பண்பின் சிகரமே பாசத்தின் உறைவிடமே பாதியிலே எமை பிரிந்ததன் விந்தை என்ன எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீ அருகிருக்கும் உணர்வுகளோடு அவனிலே வாழ்கின்றோம்- ஆறாத உன் நினைவுகளை நெஞ்சத்துள் சுமந்தபடி இவ் வையத்தில் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம்.
எழில்கொண்ட உன் முகமும் எடுப்பான நடையும் காண்போரை மகிழ்விக்கும் கனிவான பேச்சும் கடமையிலே காட்டும் கண்ணியத்தையும் - இனி எப்பிறப்பில் நாம் காண்போம் இந்திரனே. மலைபோல மகிழ்வொன்று எம்மேல் வந்து வீழ்ந்தாலும் மனம்தனில் நுழையாது ஏனெனில் நாம் மகிழ நீ வேண்டும்
ஆண்டுகள் ஐந்தல்லா அளவிலா ஆனாலும் -ஆறாது செல்வமே எம்மைவிட்டு நீ பிரிந்த துயர் எனினும் ஜடமாக வாழ்கின்றோம் உன்இலட்சியக்கனவு ஈடேறும் என்ற நம்பிக்கையுடன்…
“எம் குலக்கெழுந்துடன் விதையான ஏனைய செல்வங்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்
|