பிரான்சில் சிறிலங்கா சுதந்திர தினத்தை கண்டிந்து சிறிலங்கா இனப்படுகொலை நாடு என்று வலியுறுத்தி போராட்டம்!


பெப்ரவரி 4ஆம்நாள் திங்கள்கிழமை பிரான்சில் உள்ள சிறி லங்கா தூதராலயதிட்கு அருகாமையில் போராட்டம் நடைபெறவுள்ளது ஓங்கி ஒலிக்கும் எமது குரல் சர்வதேச மன்றத்தில் சிறிலங்காவை குற்றவாளி கூண்டில் ஏற்றும்.

எங்கள் ரத்தத்தால் உன் சுதந்திர கொடியினை வரைந்துகொண்டு,எங்கள் எலும்புகளை கம்பங்கள் ஆக்கிக்கொண்டு,எம் உயிர்களை கொடிக்கயிறாய் திரித்துக்கொண்டு உன் 65ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட போகிறாயா?
பிரான்சில் உள்ள சிறீலங்கா தூதரகத்திற்கு அருகாமையில் பெப்ரவரி 4ஆம் நாள் பிற்பகல் 15.00 மணிதொக்கம் 18.00 மணிவரை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்குகொள்க-தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.