திரு நாகமுத்து சந்திரகுமார் (கிளி)

பிறப்பு : 22 மே 1950 — இறப்பு : 23 பெப்ரவரி 2013

கோட்டை காடு மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கோர்ட் ரோட்டை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சந்திரகுமார்(கிலி) அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் நாகமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகமுத்து மணி தம்பதிகளின்  மருமகனும்,
தேவி அவர்களின் அன்பு கணவரும்,
ரமேஷ், சுதா, தங்கா, புருசுளி ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
தம்பிராசா, கணேஷமூர்த்தி, முருகையா, லலிதாதேவி, சுசிலாதேவி, புஷ்பளிலாதேவி, சவ்ந்தலாதேவி, மற்றும் காலஞ்சென்றவரான நாகேஸ்வரன்( முருகண்டி) மற்றும் இந்திரகுமார், சூரியகுமார்,  விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 25-02-2013 திங்கட்கிழமை அன்று 13.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மல்லாகம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
நாகமுத்து விஜயகுமார்
தொடர்புகளுக்கு
நாகமுத்து விஜயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447868843450
சூரி (மல்லாகம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775023451