அமரர் ரம்யா ஞானச்சந்திரபோஸ்
தோற்றம் : 6 டிசெம்பர் 1989 — மறைவு : 29 டிசெம்பர் 2012
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ரம்யா ஞானச்சந்திரபோஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், ஞானச்சந்திரபோஸ்(கப்பல் ஞானி), ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
G.கௌசி, G.கீர்த்தி, G.ஜோஷிதா(நிலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரவேற்பிள்ளை - சீதாலட்சுமி(இலங்கை),பாலசுப்பிரமணியம் - தவமணிதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற க.சுபாஷ்சந்திரபோஷ், க.சரச்சந்திரபோஷ்(டிராக்டர் கட்டி -
இலங்கை), க.அரிச்சந்திரபோஸ்(இந்தியா), ஜெயச்சந்திரபோஸ்(பிக்கப் ரவி),
செல்வச்சந்திரபோஸ்(மணி - நோர்வே), க.யோகச்சந்திரபோஸ்(லண்டன்) ஆகியோரின்
பெறாமகளும்,
மலரோகிணி அம்மா - அருமைச்சந்திரலிங்கம்(கனடா), காந்திமதி -
முருகுப்பிள்ளை(இலங்கை), பத்மாவதி - விஜயகுமார்(இலங்கை), இந்துமதி -
செல்ரெத்தினம்(இலங்கை), பானுமதி - கிருஷ்ணகுமார்(இலங்கை), B.ராஜேஸ்வரன்,
சாலினி(அமேரிக்கா) ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி 28.01.2013 திங்கட்கிழமை அன்று அதிகாலை
இராமேஸ்வரம் புண்ணியதீர்த்தத்தில் அஸ்தி கரைக்கப்பட்டு பின்னர் அன்று
மதியம் 10/36,மங்கம்மாள் சாலை,ரெங்கா நகர், திருச்சி-21 என்ற முகவரியில்
நடைபெறும் சவண்டிக் கிரியைகளிலும், ஆத்மசாந்தி கிரியைகளிலும் தொடர்ந்து
நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இறுதிச் சடங்கில் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றியை தெருவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |